வெப்பச்சலனம் காரணமக கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

வெப்பச்சலனம் காரணமக கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மதுரை, திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்ஷியஸை ஒட்டி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்



காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மதுரை, திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்ஷியஸை ஒட்டி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;  தென்மேற்கு பருவக்காற்று , வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கோவை, நீலகிரி ,தேனி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று முதல் 23ம் தேதி வரை தென்மேற்கு , மத்திய மேற்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த  காற்று வீசும் என்றும் அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 60 கி.மீ. வரை பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் மீன் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com