சென்னையில் வேகமாக பரவும் கொரோனா

சென்னையில் வேகமாக பரவும் கொரோனா
சென்னையில் வேகமாக பரவும் கொரோனா

சென்னையில் வேகமாக பரவும் கொரோனா

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,246ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு 11,313 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 154ஆக உள்ளது.
 அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,362ஆக அதிகரித்துள்ளது. 6,895 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 113ஆக உள்ளது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 2,446 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் 1,678 பேருக்கும், திரு.வி.க.நகரில் 1,437 பேருக்கும், அண்ணாநகரில் 1,143 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
இதேபோல், தண்டையார்பேட்டையில் 1,425 பேரும், தேனாம்பேட்டையில் 1,500 பேரும், திருவொற்றியூரில் 414 பேரும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளசரவாக்கத்தில் 816 பேருக்கும், பெருங்குடியில் 226 பேருக்கும், அடையாறில் 745 பேருக்கும், அம்பத்தூரில் 539 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆலந்தூரில் 188 பேருக்கும், மாதவரத்தில் 298 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 233 பேருக்கும், மணலியில் 190 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com