100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களின் வீடுகளுக்கே சென்று ஊதியம் வழங்க உத்தரவு
100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களின் வீடுகளுக்கே சென்று ஊதியம் வழங்கும்படி முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 3 மாதங்களுக்கு இந்த நடைமுறை தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களின் வங்கிக் கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்பட்டது. வங்கிகளுக்கு சென்று சம்பளத்தை பெற்று வந்தனர். தற்போது ஊரடங்கு காரணமாக, பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தை போக்க நேரடியாக பணத்தை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.100 நாள் வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கான தினக்கூலி 229 ரூபாயில் இருந்து 256 ரூபாயாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.