இது குறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "புழல் சிறையில் இருந்து 30 பேரில் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள கைதிகள் சிறைக்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சிறைச்சாலைகள் போன்ற முற்றிலும் மூடப்பட்ட இடங்களில் கூட இந்த கொரோனா தொற்று பரவியுள்ளதால், சிறைச்சாலை அதிகாரிகள் கைதிகளின் நடமாட்டத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்" என கூறியுள்ளார்.