மன்னார் வளைகுடா பகுதியில் 62 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு…

மன்னார் வளைகுடா பகுதியில் 62 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு…

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் சுகந்தி தேவதாசன் என்ற கடல் ஆராய்ச்சி நிறுவனத்தார் ஆய்வு மேற்கொண்டனர்.

ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி கடல் பகுதி மற்றும் இலங்கை வரையிலும் மன்னார் வளைகுடா பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதி தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது,

இந்தப் பகுதியில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.’இந் நிலையில் கடந்த மூன்றாண்டுகளாக கடலுக்கு அடியில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் சுகந்தி தேவதாசன் என்ற கடல் ஆராய்ச்சி நிறுவனத்தார் ஆய்வு மேற்கொண்டனர்.

அதன்படி, புதிதாக 62 உயிரினங்கள் இப் பகுதியில் உள்ளதாக கண்டறைந்துள்ளனர். இதில் கடல் பஞ்சு இனங்கல், கடின பவளப்பாறை இனங்கல், கடல் பாசி இனங்கள், மீன் இனங்கள், மெல்லிய பவளப்பறை இனங்கள். சங்கு இனங்கள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com