பணிக்கு புறப்பட்ட பெண் காவலர் மயங்கி விழுந்து மரணம் அடைந்த செய்தி போலீசார் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் வசிப்பவர் பிரபு. இவருடைய மனைவி சுமைல் (வயது 34), இவர் கோவை ஆயுதப்படையில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக காய்ச்சல் காரணமாக விடுமுறையில் இருந்தார். காய்ச்சல் குணமாகியதை அடுத்து இன்று பணிக்கு புறப்பட்டார். 10.30 மணி அளவில் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் உள்ள அவரது வீட்டில் இருந்து வெளியே வந்த போது திடீரென மயங்கி விழுந்தார். அங்கு பணியில் இருந்த காவலர்கள் அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலமாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தூக்கி வந்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார். அவர் மாரடைப்பின் காரணமாக இருந்ததாகவும் தெரிவித்தனர். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பணிக்கு புறப்பட்ட பெண் காவலர் மயங்கி விழுந்து மரணம் அடைந்த செய்தி போலீசார் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.