சென்னை: கிரிக்கெட் - ஆன்லைன் டிக்கெட் விற்பனையில் பல கோடி முறைகேடு - நீதிமன்றத்தில் வழக்கு

கிரிக்கெட் போட்டி
கிரிக்கெட் போட்டி

ஐ.பி.எல். போட்டிகளின் ஆன்லைன் டிக்கெட் விற்பனையில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதால் அது குறித்த விவரங்களை தாக்கல் செய்யக்கோரி சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை மதுரவாயலைச் சேர்ந்த அசோக் சக்கரவர்த்தி என்ற கிரிக்கெட் ரசிகர் தாக்கல் செய்த மனுவில், 'கடந்த மார்ச் மாதம் முதல் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் ஏழு போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்த போட்டிகளுக்கான ஆன் லைன் மற்றும் நேரடி டிக்கெட்கள் விற்பனையில் பல கோடி ரூபாய்க்கு முறைகேடுகள் நடந்துள்ளது.

மேலும், வரும் 23 -ம் தேதி மற்றும் 24 ம் தேதிகளில் தகுதிப் போட்டிகள் நடக்க உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

பெரும்பாலான டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது. எனவே, இது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,

இதனால், இதுவரை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 7 போட்டிகளின் போது ஆன்லைன் மூலம் விற்கப்பட்ட டிக்கெட்டுகள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்கும்படி பி.சி.சி.ஐ, சென்னை சூப்பர் கிங்ஸ், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு உத்தரவிட வேண்டும்' என தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com