தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

நாளை முதல் மீண்டும் அண்ணாமலை நடைபயணம் - முழு விவரம்

வரும் 10-ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகரில் நடைபயணத்தை தொடங்குகிறார் அண்ணாமலை

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நாளை முதல் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து மீண்டும் நடை பயணத்தை தொடங்குகிறார்.

ஊழலுக்கு எதிராகவும், மத்திய பாஜக ஆட்சியின் 9 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும் தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். ராமேஸ்வரத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி இந்த நடைபயணம் தொடங்கியது. இந்நிலையில், அண்ணாமலை நடைபயணத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரங்கன் பேசுகையில், நாளை மறுநாள் அதாவது, 9-ம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு காரியாப்பட்டியில் நடை பயணத்தை தொடங்க உள்ளார்.

இதனைத்தொடர்ந்து, திருச்சுழியில் ரமண மகரிஷி இல்லத்தை பார்வையிட உள்ளார். மாலையில் அருப்புக்கோட்டையில் நடை பயணம் மேற்கொள்ள உள்ளார்.

அடுத்து, வரும் 10-ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகரில் பாண்டியன் நகரில் நடைபயணத்தை தொடங்கும் அண்ணாமலை, விருதுநகர்-சாத்தூர் ரோடு சந்திப்பில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். பின்னர், மாலையில் சிவகாசியில் நடைபயணம் மேற்கொள்கிறார்.

இதனைத்தொடர்ந்து, 11-ம் தேதி காலை சாத்தூரில் நடை பயணத்தை தொடரும் அண்ணாமலை, தூத்துக்குடி மாவட்டம் செல்கிறார்.

இதனைத்தொடர்ந்து, தென்காசி மாவட்டத்தில் நடைபயணத்தை நிறைவு செய்கிறார். பின்னர் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் நடைபயணம் மேற்கொள்கிறார் என்றார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com