சமூகநீதிக்காக ஆற்றிய பங்களிப்பு குறித்து விவாதிக்க திமுக தயாரா?-ஆர்.பி.உதயகுமார் கேள்வி

ஜெயலலிதா தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல், அதிகாரம் பெற்று தருவதற்காக தனித்தொகுதி மட்டுமல்லாமல் பொது தொகுதிகளிலும் நிற்க வைத்து அவர்களை வெற்றி பெற வைத்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

5 முறை ஆட்சியில் இருந்த திமுக சமூகநீதிக்காக ஆற்றிய பங்களிப்பை மக்களிடத்தில் விவாதிக்க தயாரா? என ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், ”சமூக நீதிப் பற்றி ஒவ்வொரு நாளும் அக்கரையோடு  திமுக பேசி வருவது திசை திருப்பும் வகையில் உள்ளது. 

சமூக நீதியை இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களில் வழிகாட்டும் வகையில் 69 சதவீத இட ஒதுக்கீட்டினை தமிழகத்திற்கு பெற்றுக் கொடுத்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அதை, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 9வது அட்டவணையில் இடம்பெறச் செய்து இதன் மூலம் வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு வெற்றிகரமான நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.

அதனால் தான் தமிழக மக்கள் சமூக நீதி காத்த வீராங்கனை என்று பாராட்டினர்.அதேபோல் சமூக நீதியில் புரட்சி செய்தார். ப.தனபாலை சட்டமன்ற பேரவை தலைவராக அமர்த்தினார்.இதன்மூலம் ஜெயலலிதா உட்பட அனைவரும் அவர் வரும்பொழுது எழுந்து வணங்கினார்.இதன் மூலம் அவர் சார்ந்த சமுதாயத்தில் தலைமுறை தலைமுறையாக பெருமை கிடைக்கும் வகையில் இருக்கையை தந்தார். 

ஆனால் திமுகவை சார்ந்தவர்கள் அந்த இருக்கையை சுக்கு நூறாக உடைத்து, அவரை சட்டையை பிடித்து கிழித்து,அவரை காயப்படுத்தி அவமானப்படுத்தினர்.இது சட்டசபை நிகழ்வாகும்.இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் பதில் கூற முன் வருவாரா?

திருச்சி தொகுதியில் தலித் ஏழுமலையை நிற்க வைத்து வெற்றி பெற வைத்து, மத்திய அமைச்சராகவும் ஜெயலலிதா ஆக்கினார். 

தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல், அதிகாரம் பெற்று தருவதற்காக தனித் தொகுதி மட்டுமல்லாமல் பொது தொகுதிகளிலும் நிற்க வைத்து அவர்களை வெற்றி பெற வைத்தார்கள். தன்சிங் என்பவரை பல்லாவரம் பொதுதொகுதியில் நிற்க வைத்து வெற்றி பெற வைத்தார்கள்.

 வாணியம்பாடியில் வடிவேல் என்பவரை நிற்க வைத்து வெற்றி பெற வைத்து, சமூக நீதிப் புரட்சியை செய்தார்.ஜாதி வேறுபாடு இல்லாமல், மத வேறுபாடு இல்லாமல் ஜெயலலிதா முன்மாதிரியாக உருவாக்கி கொடுத்து கொடுத்துள்ளார் .

திமுக சேர்ந்தவர்களை பார்த்து கேட்கிறேன் சமூக நீதியை பற்றி பல ஆண்டுகளாக பேசுகிறீர்கள், ஐந்து முறை ஆட்சி செய்துள்ளீர்கள்.சமூக நீதிக்காக நீங்கள் ஆற்றிய பங்களிப்பு என்ன என்பதை மக்களிடத்தில் நீங்கள் விவாதிக்க தயாரா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com