'என்.எல்.சி ஆதரவாக தி.மு.க செயல்டுகிறது' ; முதல்வர் வாய் திறக்காமல் இருக்க இது தான் காரணமா? அன்புமணி ஆவேசம்

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்குத் தமிழர்கள் மீது அக்கறை இருந்தால் டெல்லி சென்று நிலக்கரியை இறக்குமதி செய்து அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யக் கோரிக்கை வைக்கட்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
'என்.எல்.சி ஆதரவாக தி.மு.க செயல்டுகிறது' ; முதல்வர் வாய் திறக்காமல் இருக்க இது தான் காரணமா? அன்புமணி ஆவேசம்

நெய்வேலியில் என்.எல்.சிக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி பா.ம.கவைச் சேர்ந்த 55 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 20 பேர் பாளையங்கோட்டை மத்தியச் சிறையிலும் 18 பேர் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 20 பேரைப் பார்ப்பதற்காக அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் நெல்லை வந்தார். சிறையில் இருக்கும் கட்சிக்காரர்களைப் பார்த்து ஆறுதல் கூறினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "என்.எல்.சிக்கு எதிராக அமைதியாகத் தான் போராட்டம் நடைபெற்றது. அதில் சில சமூக விரோதிகள் ஊடுருவி கலவரத்தை ஏற்படுத்தினார்கள். காவல்துறையினரும் எங்களது கட்சியினரை நோக்கி கல் வீசி தாக்கி மண்டைகளை உடைத்தனர். என்.எல்.சிக்கு எதிராக யாரும் போராடக் கூடாது என்பதற்காகவே கடுமையான நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வருகிறது. என்.எல்.சியில் மூன்றாவது குவாரி தோண்டப்பட உள்ளது. இதற்காக அப்பகுதியில் உள்ள 23 கிராமங்களில் 25,000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்குத் தமிழக அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை புதிய நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படாது எனச் சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதிமொழி அளித்திருந்தார்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி மூன்றாவது சுரங்கம் அமைக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அது குறித்து ஏன் ஸ்டாலின் வாய் திறக்கவில்லை. என்.எல்.சி வெளியேற வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.இப்போது விளை நிலங்களை அழித்துவிட்டு பின்னர் சாப்பாட்டிற்கு என்ன செய்யப் போகிறோம். அனைத்து விவகாரத்திலும் பாஜ.கவை எதிர்க்கும் திமுக என்.எல் சிக்கு மட்டும் ஏன் ஆதரவாக இருக்கிறது. சில ஆண்டுகளில் தனியாருக்கு என்.எல்.சியை கொடுக்கப்போகிறது.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்குத் தமிழர்கள் மீது அக்கறை இருந்தால் டெல்லி சென்று நிலக்கரியை இறக்குமதி செய்து அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யக் கோரிக்கை வைக்கட்டும். நெய்வேலி தொடர்பான போராட்டமே மத்திய மாநில அரசுகளை கண்டித்துத்தான் நடக்கிறது.

என்.எல்.சி விவகாரம் என்பது மண்,மக்களுக்கு எதிரான பிரச்சனை. தமிழகத்தில் இருக்கும் அனைவரும் என்.எல்.சிக்கு எதிராகப் போராட்டம் நடத்த வேண்டும். சட்டமன்றத்தில் புதிய நிலக்கரி சுரங்கம் வராது என முதல்வர் உறுதிகொடுத்தார், ஆனால் இந்த விவகாரம் நடக்கும் நிலையில் எந்த பதிலும் இல்லை. தொடர்ந்து எங்கள் போராட்டம் கடுமையான முறையில் நடக்கும்.

இந்த பிரச்சனை தேர்தலுக்காக நடத்தப்பட்ட போராட்டமல்ல. பூடான் நாட்டில் புகையிலை பொருட்களுக்குத் தடை உள்ளது போல் இந்தியாவிலும் வரவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் 13½ லட்சம் பேர் புகையிலையால் மரணம் நடக்கிறது. 2026ல் பா.ம.க மற்றும் அதனையொட்டியுள்ள கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதே எங்கள் இலக்கு. அதற்கான நடவடிக்கைகள் 2024ல் தொடங்கும் . புகைப்பிடித்தல் தொடர்பான கடுமையான சட்டங்கள் கொண்டு வந்து அதனைத் தடுக்க உறுதி செய்யவேண்டும் " என்றார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com