தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அண்மையில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.
அதில், 'டாஸ்மாக் கொள்முதல் செய்யும் மதுபானங்களில், 60 சதவீத மதுபானங்களுக்கு மட்டும் ஆயத்தீர்வை விதிக்கப்படுகிறது. 40 சதவீதத்துக்கு ஆயத்தீர்வை விதிக்கவில்லை. டாஸ்மாக் நிறுவனத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது' என புகார் தெரிவித்தார்.
இந்த நிலையில், 'தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கிருஷ்ணசாமி அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அவதூறு கருத்துக்களை அவரது கட்சியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். மேலும், ட்விட்டர் பக்கத்திலும் அவதூறு கருத்துக்களை பதிவு செய்துள்ளார்' என தெரிவித்துள்ளார்.
இதனால், கிருஷ்ணசாமிக்கு எதிராக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.