தமிழ்ச்செல்வன்
தமிழ்ச்செல்வன்

தேனி: 'கேரள ஆயில் மசாஜ்-யில் ஓ.பி.எஸ். பிஸி" - தங்க தமிழ்ச்செல்வன் புகார்

15 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் போடிக்கு எந்த ஒரு திட்டங்களும் கொண்டு வரவில்லை

'அ.தி.மு.க ஆட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், போடி தொகுதிக்கு என உறுப்படியான எந்த ஒரு திட்டமும் கொண்டு வரவில்லை' என முன்னாள் அமைச்சர் தங்க தமிழ்ச்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி அலுவலகத்தில் இன்று தேனி தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ் செல்வன் பத்திரிகையாளரை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், போடி நாயக்கனூரில் 100 கோடி ரூபாய் செயல் திட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள முல்லைப் பெரியாறு - கொட்டகுடி கூட்டு குடிநீர் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதனை தொடங்கிவைக்க, தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் போடிநாயக்கனூருக்கு வருகைதர உள்ளனர்.

சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் ஓ.பன்னீச் செல்வத்திற்கு அழைப்பு விடுக்கப்படும். வருவதும், வராமல் இருப்பதும் அவருடைய தனி விருப்பம்.

போடி சட்டமன்ற தொகுதியில் ஜெயித்தற்கு பிறகு, இதுவரை அவர் எத்தனை முறை போடி நாயக்கனூருக்கு வந்துள்ளார் என்று தெரியவில்லை.

15 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் போடிக்கு எந்த ஒரு திட்டங்களும் கொண்டு வரவில்லை. எம்.எல்.ஏ-வாக ஆன பின்பு கேரளாவில் ஆயில் மசாஜ் செய்து வருவதில் காட்டும் ஆர்வம் தொகுதி நலனில் காட்டுவதில்லை' என்று புகார் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com