கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 7 நாடுகளின் அமைப்பான 'ஜி-7' அமைப்பின் உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. இம்மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி , அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அதில் பிரதமர் மோடி பேசும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தங்களுக்கு டிக்கெட்கள் வேண்டுமென்று முக்கிய நபர்களின் கோரிக்கைகள் எழுந்துள்ளதாம்.
இதையடுத்து அடுத்தமாதம் அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் அமெரிக்க தலைவர்கள் அரசு விருந்து அளிக்க உள்ளனர். மோடியின் அமெரிக்க வருகையை குறித்து பேசிய அதிபர் பைடன், பிரதமர் மோடி பேசும் விழாவில் கலந்துகொள்ள நாடு முழுவதும் உள்ள அனைவரும் விரும்புகிறார்கள். எனக்கு தான் டிக்கெட் தீர்ந்து விட்டது என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து, தான் இந்தியாவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டபோது பிரதமர் மோடி, பெரிய கூட்டத்தை எப்படி எளிதாக வழி நடத்தினார் என்பதை நினைவுபடுத்தினார். மோடியின் இந்த செயலுக்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடியிடம், உங்கள் ஆட்டோகிராப் வேண்டும் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.