ஒரு தொகுதிக்கு ரூ15 கோடி- மாணவர்களுக்கு அரசியல் பாடம் எடுத்த நடிகர் விஜய்

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

’’பணத்தை இழக்கலாம். ஆனால், குணத்தை இழக்கக்கூடாது’’என நடிகர் விஜய் மாணவ- மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

கல்வி விருது வழங்கும் விழா சென்னை, நீலாங்கரையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய், ‘’மதிப்பெண்கள், கிரேடுகளைத் தாண்டி, உங்களுடைய கேரக்டருக்கும், சிந்திக்கும் திறனுக்கும் முக்கியத்துவம் கொடுத்தாலே அது முழுமையான கல்வி. நாளைய தலைவர்களை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள். உங்கள் பெற்றோரிடம் காசு வாங்கி கொண்டு ஓட்டு போட வேண்டாம் என்று சொல்லுங்கள். அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களை பற்றி மாணவிகள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது என்பது மிகவும் தவறானது. சமூகவலைதளங்களில் இப்ப நிறைய பரவிக்கிடக்கின்றன. அதில் எதை நம்ப வேண்டும், நம்ப கூடாது என நீங்கள்தான் ஆராய வேண்டும்.

நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள் காசு வாங்கிவிட்டு ஓட்டு போடாதீர்கள். வாக்கிற்கு பணம் வங்கும் முறை ஒழிய வேண்டும். பணத்தை இழக்கலாம். ஆனால், குணத்தை இழக்கக்கூடாது. நாம் படிக்க வேண்டும். தேர்வு, மதிப்பெண் அனைத்தும் முக்கியம் தான் அதையும் தான் உங்கள் குணநலனுக்கும், சிந்திக்கும் திறனுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள் அது மிகவும் முக்கியம். அதேவேளை உங்கள் சுய அடையாளத்தை எக்காரணம் கொண்டும் விட்டு விடாதீர்கள். நம் வாழ்க்கை நம் கையில் தான் என்பதை நம் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த காலம் தகவல்கள் கொண்ட காலம். வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் இன்னும் பல.

இதில் பெரும்பாலும் போலி செய்திகள் உள்ளன. சமூகவலைதளத்தில் செய்தி பதிவிடும் ஒருசிலருக்கு ஒரு மறைமுக நோக்கம் இருக்கும். ஒரு கவர்ச்சிகரமான தகவல்கள் மூலமாக நாம் அந்த கவனத்தை பெற்றுக்கொள்ளலாம் என சிலது நடக்கும். எதை எடுத்துக்கொள்ளலாம் எதை எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதை நீங்கள் தான் ஆராய வேண்டும். எது உண்மை எது பொய்? எதை நம்பலாம் எதை நம்பக்கூடாது. இதற்கு உங்கள் பாடப்புத்தகங்களை தாண்டி நீங்கள் படிக்க வேண்டும். முடிந்தவரை படியுங்கள் எல்லோரையும் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் எல்லா தலைவர்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். அம்பேத்கர், பெரியார், காமராஜரை பற்றி தெரிந்துகொள்ளுங்கள். நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ளுங்கள் மற்றதை விட்டுவிடுங்கள்.

நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து புதிய நல்ல நல்ல தலைவர்களை நீங்கள் தான் தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள். ஆனால், நம் விரலை வைத்து நம் கண்ணை குத்துவது பற்றி கேள்விபட்டுள்ளீர்களா? அது தான் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது தான் நாமும் இப்போது செய்துகொண்டிருக்கிறோம். பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பது. உதாரணமாக கூறுகிறேன் ஒரு வாக்கிற்கு 1000 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள் ஒரு தொகுதியில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கொடுக்கிறார்கள் என்றால் 15 கோடி ரூபாய் ஆகிறது.

ஒருவர் 15 கோடி ரூபாய் செலவு செய்கிறார் என்றால் அவர் அதற்கு முன் எவ்வளவு சம்பாதித்து இருக்க வேண்டும். யோசித்து பாருங்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் அவர்கள் பெற்றோரிடம் சென்று அப்பா, அம்மா இனிமேல் பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்காதீர்கள் என்று கூறிப்பாருங்கள். முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் கூறினால் நடக்கும் என எனக்கு நம்பிக்கை உள்ளது. நீங்கள் தான் அடுத்தடுத்த ஆண்டுகளில் முதல் முறை வாக்காளர்களாக வர உள்ளீர்கள்’’என அவர் தெரிவித்தார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com