'இஸ்லாமியர்களிடம் வாக்குக் கேட்க வேண்டிய அவசியமில்லை'- கர்நாடக பா.ஜ.க மூத்த தலைவர் ஈஸ்வரப்பா பேச்சு

'இஸ்லாமியர்களிடம் வாக்குக் கேட்க வேண்டிய அவசியமில்லை'- கர்நாடக பா.ஜ.க மூத்த தலைவர் ஈஸ்வரப்பா பேச்சு
'இஸ்லாமியர்களிடம் வாக்குக் கேட்க வேண்டிய அவசியமில்லை'- கர்நாடக பா.ஜ.க மூத்த தலைவர் ஈஸ்வரப்பா பேச்சு

இந்து - இஸ்லாமியர் பிரச்னை குறித்து பேசி தேர்தலை சந்திப்போம்.

‘’மே- 10ஆம் தேதி நடைபெற உள்ள கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஷிவமொக்கா தொகுதியில் உள்ள  60,000 இஸ்லாமிய மக்களிடம் வாக்கு கேட்க வேண்டிய அவசியம் இல்லை’’ என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.எஸ். ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார். 
ஏப்ரல் 24 அன்று சிவமொகாவில் உள்ள வினோபா நகரில் உள்ள எடியூரப்பாவின் இல்லத்தில் நடைபெற்ற வீரசைவ - லிங்காயத் சமூகத்தினர் கூட்டத்தில் உரையாற்றிய பி.எஸ்.ஈஸ்வரப்பா, “அனைத்து சாதி மக்களிடமும் பழகுவோம். பா.ஜ.க ஆட்சியின் போது அவர்கள் அனுபவித்த நன்மைகள் குறித்து விசாரிப்போம். ஒவ்வொரு சமூகமும் பயனடைந்துள்ளது. நகரில் சுமார் 60,000 இஸ்லாமியர்கள் உள்ளனர். அவர்களின் வாக்குகள் எங்களுக்கு வேண்டாம்.  அவர்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் தனித்தனியாக எங்கள் உதவியைப் பெற்றுள்ளார்கள். தேசியவாத இஸ்லாமியர்கள் நிச்சயம் பா.ஜ.க-வுக்கு வாக்களிப்பார்கள். வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேச வேண்டாம்; இந்து - இஸ்லாமியர் பிரச்னை குறித்து பேசி தேர்தலை சந்திப்போம்.
பா.ஜ.க ஆட்சியில் இந்துக்கள் பாதுகாப்பாக இருந்தனர். யாரும் இந்துக்களை தாக்கத் துணியவில்லை. பா.ஜ.க அல்லாத எந்த அரசும் ஆட்சிக்கு வந்தால் தாங்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது என்ற உணர்வு பொதுமக்கள் மத்தியில் உள்ளது’’ என அவர் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ’’பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து, அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று வீரசைவ - லிங்காயத்துகளுக்கு’’வேண்டுகோள் விடுத்தார். வீரேந்திர பாட்டீலை முதல்வர் பதவியில் இருந்து முறையற்ற வகையில் நீக்கியதன் மூலம் லிங்காயத் சமூகத்தை காங்கிரஸ் அவமதித்தது. அதை நாம் மறந்துவிடக் கூடாது'' எனவும் அவர் நினைவூட்டினார். 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com