சாலையோரங்களில் வீசப்பட்ட பழைய பாட்டில்கள், பேப்பர்களை சேகரித்த ஏழைப் பெண்ணை, ஒருவர் செருப்பால் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகர் பகுதியில் மிகவும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த பல குடும்பங்கள் பிழைப்பிற்காக குழந்தைகளுடன் ஒவ்வொரு பகுதியாக சென்று சாலையோரம் கிடக்கும் பழைய பாட்டில்கள், பழைய பேப்பர்கள், இரும்பு பொருட்களை சேகரித்து அவற்றை கடையில் விற்று குடும்பம் நடத்தி வருகின்றனர்.