12 மணிநேர வேலை மசோதா: 'யாரும் எதிர்பாராத முக்கிய முடிவு வெளியாகும்' - அமைச்சர் சேகர்பாபு தகவல்

12 மணிநேர வேலை மசோதா: 'யாரும் எதிர்பாராத முக்கிய முடிவு வெளியாகும்' - அமைச்சர் சேகர்பாபு தகவல்
12 மணிநேர வேலை மசோதா: 'யாரும் எதிர்பாராத முக்கிய முடிவு வெளியாகும்' - அமைச்சர் சேகர்பாபு தகவல்

தொழிலாளர்கள் யாரும் குழப்பம் அடைய வேண்டாம்

"முதல்வரின் வழிகாட்டுதலின்படி நாளை அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டத்தில் 12 மணி நேர வேலை சட்ட மசோதா தொடர்பாக யாரும் எதிர்பாராத முடிவை முதல்வர் எடுப்பார்’’என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 
தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை என்ற சட்டம் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், 12 மணி நேரமாக உயர்த்தும் சட்ட மசோத தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன் தினம் தாக்கம் செய்யப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. இந்த சட்ட மசோதாவை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தாக்கல் செய்த போதே தி.மு.க கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்டவை கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், 12 மணி நேர வேலை மசோதா குறித்து அமைச்சர் சேகர் பாபு கூறுகையில், முதல்வரின் வழிகாட்டுதலின்படி நாளை அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது 12 மணி நேர வேலை சட்டம் தொடர்பாக யாரும் எதிர்பாராத முடிவை முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுப்பார். இதனால் தொழிலாளர்கள் யாரும் குழப்பம் அடைய வேண்டாம்’’என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com