அதன் அடிப்படையில், நெல்லை மாநகரப் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த கணேசன், சர்க்கார் ஆகியோரின் உடல்களை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாநகர போக்குவரத்துப் புலனாய் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முதல் கட்ட விசாரணையில் இருவரும் அளவுக்கு அதிகமாக மது அருந்தி சென்றதும், மது போதையில் மின்னல் வேகத்தில் வாகனத்தை ஒட்டிச் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து வாகனம் மின் கம்பத்தில் மோதியதும் தெரிய வந்தது. இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.