நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வேம்பதேவன்காடு பகுதியில் சுமார் 5 ஏக்கரில் புதுக்குளம் அமைந்துள்ளது. இந்தக் குளம் பொதுமக்கள் குளிப்பதற்கும், ஆடு, மாடுகள் நீர் அருந்துவதற்கும் பயன்பட்டுவருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த குளத்தில் குளித்துக் கொண்டிருப்பவர்களின் கண்ணில் மிகப்பெரிய அளவிலான முதலை ஒன்று தென் பட்டிருக்கிறது. உடனே அலறியடித்துக் கரை ஏறியவர்கள் ஊர் பொதுமக்களிடம் கூறியிருக்கின்றனர். அதிலிருந்து மக்கள் யாரும் இந்தப் புதுக்குளத்தில் குளிக்கப் பயந்து வந்தனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு மக்கள் புகார் தெரிவித்ததன் பேரில் உடனே விரைந்து வந்து சிறு படகுகள் மூலம் குளத்தில் வலையை வீசி முதலையைப் பிடிக்க முயற்சிசெய்தனர்.