மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகத்தில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் படித்த திருநங்கைகள்- திருநம்பிகள் அதிகம் பேர் உள்ளனர். பக்கத்து மாநிலமான கர்நாடகா அரசு திருநங்கைகள், திருநம்பிகளுக்கு 1 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியுள்ளனர். தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது. இலவச அடையாள அட்டை, மாத உதவித்தொகை ஆகியவை வரவேற்கப்பட வேண்டியவை. ஆனால், அடிப்படைத் தேவையான கல்வி, வேலைவாய்ப்பில் 1 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதுதான் எங்களது முக்கியமான நீண்ட கால கோரிக்கை. அவை நிறைவேற்றப்பட்டால் பிச்சை எடுப்பது, பாலியல் தொழிலில் ஈடுபடுவது போன்ற செயல்களில் அவசியம் இருக்காது.