ராகுல் காந்திக்கு எதிராக சத்யாகி கொடுத்துள்ள அவதூறு புகாரில், ' இங்கிலாந்து பயணத்தின் போது நடந்த ஒரு நிகழ்ச்சியில் சாவர்க்கருக்கு எதிராக ராகுல் காந்தி தவறான கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில், ’விநாயக் தாமோதர் சாவர்க்கர் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார், அதில் சாவர்க்கரும் அவரது ஐந்து- ஆறு நண்பர்களும் சேர்ந்து இஸ்லாமிய நபரை அடித்து மகிழ்ந்தனர்' எனக் கூறியுள்ளார். இது கோழைத்தனமான செயல் இல்லையா?’ என்று ராகுல் காந்தி பேசினார். இது கற்பனைக்கும் எட்டாத தகவல். அடிப்படை ஆதரமில்லாமல் இதுபோன்று ராகுல் காந்தி பேசி எங்களைப் புண்படுத்தியுள்ளார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.