'மூன்று மாதங்களுக்கு முன்பே நீக்கப்பட்ட கிருஷ்ணபிரபு' - பா.ஜ.க அறிக்கை சொல்வது என்ன?

'மூன்று மாதங்களுக்கு முன்பே நீக்கப்பட்ட கிருஷ்ணபிரபு' - பா.ஜ.க அறிக்கை சொல்வது என்ன?
'மூன்று மாதங்களுக்கு முன்பே நீக்கப்பட்ட கிருஷ்ணபிரபு' - பா.ஜ.க அறிக்கை சொல்வது என்ன?

மூன்று மாதங்களுக்கு முன்பே கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு விட்டார்.

கட்சி நிர்வாகிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தால் கட்சி ஒருபோதும் வளராது என குற்றம்சாட்டிய பா.ஜ.க மாநில பொருளாதார பிரிவு  செயலாளர் கிருஷ்ண பிரபு மூன்று மாதங்களுக்கு முன்பே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கிருஷ்ணபிரபு இன்று வெளியிட்டு இருந்த  தனது ராஜினாமா கடிதத்தில், ‘’ஆருத்ரா போன்ற மோசடியில் ஈடுபட்ட நபர்கள் பா.ஜ.க மாநில தலைமைக்கு மிக நெருக்கமாக இருந்து வருகின்றனர். இதை கண்டும் காணாமல் இருப்பதற்கு என் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. என்னை பாஜக பழுது பார்த்து விட்டது. பணம் உள்ளவர்களுக்கு மட்டும் தான் பா.ஜ.க.,வில் பொறுப்புகள் வழங்கப்படுகிறது.  இதற்கு மேல் பா.ஜ.க.,வுக்கு என்னை அர்ப்பணித்தால் உயிருக்கே பாதிப்பு வரும் என நினைத்து நான் ராஜினாமா செய்கிறேன். அடிப்படை உறுப்பினர்களாக இருக்கத் தகுதி இல்லாதவர்களுக்கும் கட்சியில் பொறுப்பு வழங்கப்படுகிறது. கட்சி நிர்வாகிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தால் கட்சி ஒருபோதும் வளராது.
 அடிப்படை உறுப்பினர்களாக இருக்கக்கூட தகுதி இல்லாத சிலரை அண்ணாமலையும், கேசவ விநாயகமும் பொறுப்பில் அமர்த்தி அழகு பார்க்கிறார்கள். பணம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் இந்தக் கட்சியில் பொறுப்பு வழங்கப்படுகிறது என்பது ஊர்ஜிதமான உண்மை. இதற்கு பலவிதமான ஆதாரங்கள் உள்ளன. ’’ என அவர் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன் வைத்து இருந்தார். 
ஆனால், கிருஷ்ணபிரபுவின் ராஜினாமா தொடர்பாக மதுரை மாநகர் பாஜக மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தற்போது உலாவரத் தொடங்கியுள்ளது. அதில், ‘’பாரதிய ஜனதா கட்சியின் பொருளாதாரப் பிரிவு முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் கிருஷ்ணப்பிரபு கட்சிக்கு அவப்பெயர் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் மதுரை மாநகர் பாரதிய ஜனதா கட்சி எந்த ஒரு பொறுப்பிலும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவரிடம் கட்சி நிர்வாகிகள் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம்'' என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை 06.01.2023 அன்று தேதியிடப்பட்டு வெளியாகி இருக்கிறது. ’’இதன் மூலம் கிருஷ்ணபிரபு  மூன்று மாதங்களுக்கு முன்பே கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு விட்டார். அவர் இப்போது ராஜினாமா என்பதை அறிவிப்பதற்கான காரணம் என்ன? கட்சியில் இல்லாதவர் எப்படி ராஜினாமா செய்ய முடியும்?’’ என பா.ஜ.க-வினர் கேள்வி எழுப்புகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com