அரசியல்
'தமிழ் மொழி மீது இந்தியைத் திணிக்க முடியாது' -ராஜ்பவன் நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி பேச்சு
'தமிழ் மொழி மீது இந்தியைத் திணிக்க முடியாது' -ராஜ்பவன் நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி பேச்சு
ஹிந்தி மொழியை விட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது
ஹிந்தி மொழியை விட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தமிழ் தரிசனம் என்கிற தலைப்பில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்களிடையே பேசிய அவர், ‘’ஹிந்தி மொழியை விட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது. சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி. தமிழ் மீது ஹிந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது. பிறமொழி பேசுபவர்கள் தமிழ் மொழி, தமிழ் இலக்கியத்தை கற்றுக்கொள்ள நினைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
திருக்குறள் மனித சமூகத்திற்கு தேவையான அனைத்து கருத்துகளையும் வழங்கும் நூல். திருக்குறளை ஆழமாக அனைவரும் பயில வேண்டும்’’ என அவர் தெரிவித்தார்.