பிளிப்கார்ட் நிர்வாகம் உடனடியாக தனது பணத்தை திருப்பி அனுப்ப வேண்டும் என்று தனராஜ் கேட்டபோது, ‘’அந்த பார்சலில் உண்மையான செல்போன் தான் அனுப்பியிருந்தோம். கொரியர் டெலிவரியில் தான் ஏதோ தில்லு முல்லு நடைபெற்றுள்ளது. அதனால், பணத்தை திரும்ப செலுத்த முடியாது’’ என்று நிர்வாகம் கை விரித்து விட்டது. இதனால், செய்வது அறியாமல் திகைத்த தனராஜ், தனக்கு செல்போன் பார்சல் கொடுத்த இ-கார்ட் கொரியர் சர்வீஸ் டெலிவரி பாயை சிறை பிடித்தார். இதனை அறிந்து ஆத்தூர் இ-கார்ட் கூரியர் சர்வீஸ் மேலாளர் வீரகனூருக்கு வந்து, ’’உங்களுக்கு அனுப்பப்பட்ட செல்போன் குஜராத் மாநிலத்தில் செயல்பாட்டில் உள்ளது. இதை எங்களது செக்யூரிட்டி டீம் கண்டுபிடித்து தெரிவித்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இதனை சரி செய்து உங்களது பணத்தை திரும்ப பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்கிறேன்’’என்று வீரகனூர் காவல்நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தார். இதனால், சமரசம் அடைந்த தனராஜ் டெலிவரி பாயை விடுவித்தார்.