ஆலைக்கு எதிரான போராட்ட கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மகேஷிடம் கேட்டோம். "தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பிடுங்குவது எல்லாம் தேவையற்ற ஆணிகள்தான். வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று ஆளுநர் போகிற போக்கில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய போராளிகள் மீது பழி சுமத்தி இருக்கிறார். தமிழக அரசுக்கு எதிராகவும், தமிழ் மக்களின் அறனுக்கு எதிராக அவர் தொடர்ந்து பேசி வருகிறார். அந்த வரிசையில் தான் இந்த பேச்சையும் பார்க்க வேண்டியது இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்களால் காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் புகார் தான் இது. எனவே ஆளுநர் அதற்கு தகுந்த ஆதாரங்களை வெளியிட வேண்டும். இல்லையென்றால், அவர் தென் மாவட்டங்களுக்கு வர முடியாது" என்றார்.