காரணம், ஆ.ராசா இப்போது தான் எம்.பி.,யாக இருக்கும் நீலகிரி தொகுதியை இந்த முறை தவிர்த்துவிட்டு வேறு தொகுதிக்கு மாறும் யோசனையில் இருப்பதாக ஒரு தகவல் தடதடக்கிறது. ஏன்? என்று இறங்கி விசாரித்தபோது 3 விதமான காரணங்கள் கிடைக்கின்றன. அதாவது, ’தனித்தொகுதியான நீலகிரியில் அருந்ததியர் இன மக்களின் வாக்குகள் கணிசமாக உள்ளன. எனவே அந்த சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் வகையில் நீலகிரியை விட்டு நகர முடிவெடுத்துள்ளார் ஆ.ராசா’ என்று ஒரு தரப்பு கூறுகிறது. ஆனால், அரசியல் விமர்சகர்களோ ‘தனித்தொகுதியான நீலகிரியை பா.ஜ.க வலுவாக குறிவைத்துள்ளது. தங்களின் மத்திய இணையமைச்சரான எல்.முருகனை இங்கே நிறுத்துகிறார்கள். அதை முன்னிட்டு பா.ஜ.க.,வின் தேசிய தலைவரான நட்டா தனது பிரசாரத்தை இங்கேதான் துவக்கினார். முருகனை வெற்றி பெற வைக்க ராசாவுக்கு மிக கடுமையான சவால்களை உருவாக்க துவங்கியுள்ளது பா.ஜ.க. அதனால், நீலகிரியை விட்டு விலகும் முடிவை ஆ.ராசா யோசிக்க துவங்கியுள்ளார்’ என்கிறார்கள்.