சிவகங்கை தொகுதியின் தற்போதை எம்.பி யாரென, முழு அரசியல்வாதியான எனக்கே மறந்து விட்டது. அதேபோல்தான் மக்களது மனநிலையும் உள்ளது. இதைவிட அந்த எம்.பி-க்கே தனது தொகுதி எது என மறந்து போய் விட்டது. ஏற்கெனவே மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்கள் இணைந்து தான் நடைபெற்றன. அதை இந்திரா காந்தி தான் மாற்றினார். மேலும், மாநில ஆட்சியாளர்களின் ஸ்திரத் தன்மை இன்மையாலும் மாறியது. இனி ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். ஓராண்டுக்குள் சாத்தியம் இருக்குமா என்பது தெரியவில்லை. பழனிசாமி ஒன்றாக தேர்தல் நடக்கும் என்று நம்புகிறார். நடந்தால் நல்லது'' என்றார்.