'ஆதாருடன் வாக்காளர் அட்டையை இணைக்காவிட்டால்?' - மத்திய அமைச்சர் எச்சரிக்கை

'ஆதாருடன் வாக்காளர் அட்டையை இணைக்காவிட்டால்?' - மத்திய அமைச்சர் எச்சரிக்கை
'ஆதாருடன் வாக்காளர் அட்டையை இணைக்காவிட்டால்?' - மத்திய அமைச்சர் எச்சரிக்கை

கால அவகாசம் 2024 மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் எண்ணுடன் இணைக்கப்படவில்லை என்றால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படாது என மாநிலங்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்க வழங்கப்பட்டிருக்கும் கால அவகாசம் 2024 மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், நீட்டிப்பு குறித்து தேர்தல் ஆணையம் இதுவரை அறிவிப்பு வெளியிடவில்லை. வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள், இரட்டைப் பதிவு, இறப்பு வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றிருத்தல் ஆகியவற்றால் ஏற்படும் குழப்பங்களைப் போக்கும் வகையில் நீண்ட நாள் போராட்டத்துக்குப்பின் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.
கடந்தாண்டு ஆக.1-ம் தேதி ஆதார் இணைப்புக்கான விண்ணப்பங்கள் பெறும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. வாக்காளர் பதிவு அலுவலர்கள் நேரடியாக வீடுவீடாகச் சென்று விண்ணப்பங்களைப் பெற்றனர். அத்துடன் ‘கருடா’ என்ற செயலியிலும் ஆதார் தகவல்களைப் பதிவு செய்தனர். இதுதவிர, ஆன்லைனிலும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. இதற்கான கால அவகாசம் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் இந்தத் தகவலை மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com