கடந்த ஆண்டு பாரத் ஜோடோ யாத்திரையின் போது சாவர்கரைப் பற்றிய ராகுல் காந்தியின் கருத்துக்கள் சிவசேனா கட்சியினரை ஆத்திரப்படுத்தியது. ராகுல் காந்தியின் சமீபத்திய பேச்சு குறித்து கருத்து தெரிவித்த உத்தவ் தாக்ரே, "நாங்கள் ஒன்றாக இருக்க விரும்புகிறோம் என்பதை ராகுல் காந்தியிடம் கூற விரும்புகிறேன். இந்த நாட்டில் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் காப்பாற்ற நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம். ஆனால், பிளவுகளை உருவாக்கும் எந்த அறிக்கையையும் வெளியிட வேண்டாம். பா.ஜ.க.,வினர் உங்களைத் தூண்ட முயற்சிக்கிறார்கள். இந்த நேரத்தை நாங்கள் தவறவிட்டால், நம் நாடு நிச்சயமாக எதேச்சதிகாரத்தை நோக்கிச் செல்லும்’’ என எச்சரிக்கை விடுத்து இருந்தார்.