கொரோனா: நிலைமையை கண்காணிப்பது அவசியம்- பிரதமர் மோடி அறிவுறுத்தல்

கொரோனா: நிலைமையை கண்காணிப்பது அவசியம்- பிரதமர் மோடி அறிவுறுத்தல்
கொரோனா: நிலைமையை கண்காணிப்பது அவசியம்- பிரதமர் மோடி அறிவுறுத்தல்

மக்களுக்கு நோய் குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து வழங்க வேண்டும்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி டெல்லியில் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு பல்வேறு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். 
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,000-த்தை தாண்ட தொடங்கியுள்ளதால் பல்வேறு மாநிலங்களும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பிரதமர் மோடி இன்று மாலை 4.30மணிக்கு துறைசார் செயலாளர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரம், கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்காக முன்னெச்சரிக்கை செயல்பாடுகள் உள்ளிட்டவை தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் பல்வேறு முக்கிய உத்தரவுகளை பிரதமர் மோடி பிறப்பித்தார். அதன்படி, ‘’இந்தியாவில் கொரோனா பரிசோதனைகளை முறையாக செய்ய வேண்டும். கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிதல், கண்காணித்து சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் எனும் வகையில் டெஸ்ட், ட்ராக், ட்ரீட், தடுப்பூசி செலுத்துதல் உள்பட 5 வகையான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். கொரோனா வைரஸ்களின் மரபணு சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய மாதிரி சிகிச்சை முறை மேற்கொள்ள வேண்டும். மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதை ஊக்குவிக்க வேண்டும். மக்களுக்கு நோய் குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து வழங்க வேண்டும்’’ என அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com