இந்நிலையில், இந்து கோவில்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தி, இந்தியாவுக்கு எதிராக வாசகங்களையும் எழுதி வைத்தனர். இந்துக்கள் மீதான இந்த வெறுப்புச் செயல்களுக்கு பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் இந்தியா வந்திருந்த ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசு, ’’கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மதவழிபாட்டு கட்டிடங்கள் மீது நடத்தப்படும் எந்தவித தாக்குதல்களையும் அரசு சகித்து கொள்ளாது’’ எனத் தெரிவித்தார்.