இது தங்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. கரும்பு டன் ஒன்றிற்கு ரூ4,000 எதிர்பார்த்த நிலையில், வெறும் 195 ரூபாய் ஊக்கத்தொகை மட்டுமே அவர்கள் அறிவித்திருப்பது கரும்பு விவசாயிகளுக்கு ஏமாற்றமே. தற்போது இடுபொருள், உரம், வண்டி கூலி, ஆட்கூலி, டீசல் என அனைத்தும் விலை உயர்ந்து விட்டது. ஆனால், இவர்கள் வெறும் 195 ரூபாய் மட்டுமே உயர்த்தி இருப்பது எந்த வகையிலும் ஏற்புடையதாக இல்லை. எனவே கரும்புக்கு டன் ஒன்றுக்கு 4000 ரூபாய் மறுபரிசீலனை செய்து உயர்த்தி வழங்க வேண்டும் என ’’என கரும்பு விவசாயி கோவிந்தராஜ் கூறுகிறார்.