'எடப்பாடி மேல நடவடிக்கை எடுங்க' - உதயநிதியிடம் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கோரிக்கை

'எடப்பாடி மேல நடவடிக்கை எடுங்க' - உதயநிதியிடம் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கோரிக்கை
'எடப்பாடி மேல நடவடிக்கை எடுங்க' - உதயநிதியிடம் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கோரிக்கை

ஓபிஎஸ் தற்போதுதான், சொந்த ஊரில் இருந்து சென்னை வந்திருக்கிறார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாயார் உடல் நல குறைவால் கடந்த மாதம் மரணமடைந்த நிலையில், அவரது தாயார் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தனர். 
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு உள்ளிட்டோர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் தெரிவித்தனர். 
முன்னாள் முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார் ஓ.பழனியம்மாள் நாச்சியார், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 24 ஆம் தேதி உயிரிழந்தார். தாயின் இறுதி அஞ்சலி நிறைவடைந்த பின்னர், ஓபிஎஸ் தற்போதுதான், சொந்த ஊரில் இருந்து சென்னை வந்திருக்கிறார்.   ஓபிஎஸை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு வெளியில் வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் அங்கு கூடியிருந்த ஓபிஎஸ்அவரது ஆதரவாளர்கள், ' எடப்பாடி மேல நடவடிக்கை எடுங்க.. புடிச்சு ஜெயில்ல போடுங்க'சார்" என முழக்கமிட்டனர். 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com