நெல்லை மாநகராட்சியில் பணிகள் எதுவும் நடக்கவில்லை, மேயர் மீது பண மோசடி குற்றச்சாட்டு என அடுக்கடுக்கான புகார்களுடன் 55 கவுன்சிலர்களில் 35 திமுக கவுன்சிலர்கள் திருச்சியில் முகாமிட்டனர். இதையடுத்து மேயர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். நாளை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் சந்தித்து முறையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களாக தொடரும் சிக்கல்களால், நெல்லை மாநகர மேயரை மாற்ற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது.