’என்னைப் பார்த்து பிரதமர் மோடியே ஆச்சரியப்பட்டார்’- அமைச்சர் துரைமுருகன்

’என்னைப் பார்த்து பிரதமர் மோடியே ஆச்சரியப்பட்டார்’- அமைச்சர் துரைமுருகன்
’என்னைப் பார்த்து பிரதமர் மோடியே ஆச்சரியப்பட்டார்’- அமைச்சர் துரைமுருகன்

மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை விரைவில் வழங்குவோம்.

'நான் 54 ஆண்டுகளாக சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பதை அறிந்து பிரதமர் மோடியே ஆச்சரியப்பட்டார்' என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பொன்னை ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் சேதம் அடைந்த காட்பாடி தொகுதிக்குட்பட்ட மேல்பாடி தரைபாலம் ரூ.12.94 கோடியிலும், பொன்னை அணைகட்டை ரூ.19.50 கோடியிலும் புணரமைத்தல் பணிக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று அடிக்கல் நாட்டினார்.

பின்னர் பேசிய அவர், இந்த நிதிநிலை அறிக்கையிலேயே காட்பாடிக்கு சிப்காட் வந்துவிடும். அதற்கான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. அதேபோல் காங்கேயநல்லூர்- சத்துவாச்சாரி இடையே பாலாற்றில் மேம்பாலம் கட்டுவதற்க்கு 100 கோடி நிதி 2 நாட்களுக்கு முன்பு தான் ஒதுக்கப்பட்டுள்ளது பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

ஒரு நாள் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை நான் சந்தித்து பேசும் அவர் என்னிடம் கேட்டார், நீங்க தானே திமுக பொதுச்செயலாளர், சட்டப்பேரவையில் எவ்ளோ நாளாக இருக்கிறீர்கள் என பிரதமர் மோடி கேட்டார். நான் 54 ஆண்டு என்றதும் "What 54 Years" என ஆச்சரியப்பட்டார். ஒரே தொகுதியில் 13 முறை தேர்தலில் நின்றுள்ளேன் அதற்கு, இந்தியாவிலேயே இந்த மாதிரி யாரும் இல்லை என கூறினார் மோடி. 

12 முறை போட்டியிட்டவர் கேரள முதல்வர் உமன் சாண்டி. நான் 13 முறை போட்டியிட காரணம், காட்பாடி தொகுதியையும், மக்களையும் எனது கோயிலாக, தாயாக பார்க்கிறேன். தமிழகத்திலேயே 2 ஆண்டில் அதிக பணிகளை செய்தது காட்பாடி தொகுதி தான்.

தற்போது பொன்னை ஆற்றின் குறுக்கே தரைபாலம் அமைய உள்ள பகுதிக்கு அருகில் உள்ள சிவன் கோவில், அரிஞ்செழிய சோழன் மேல்பாடி போரில் இறந்ததன் நினைவால், ராஜரஜா சோழனால் கட்டப்பட்டது. இந்த கோயிலை பற்றி நான் பேசி பேசி அதிகமானர் வருகை தருகிறார்கள்.இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை வைக்கிறார்கள். 

இது மாநில அரசிடம் இருந்தால் உடனடியாக செய்திருப்போம்.ஆனால், இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அதன் அனுமதி பெற்று, விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

பெண்கள்  கேட்களாம், "அந்த ஆயிரம் ரூபாய் எங்க என கேட்பீர்கள், கவலைபடாதீங்க.. விரைவில் வரும். தேர்தலுக்கு முன் அந்த பாக்கியை கொடுத்துவிடுவோம். தேர்தலுக்கு ஓட்டு கேட்டு வரும் போது பாக்கி இல்லாமல் பார்த்துக்கொள்வோம் என பேசினார் அமைச்சர் துரைமுருகன்.

மேலும், இப்போது உள்ள பெண்கள் குழந்தைகளை போட்டு பொத்து பொத்துன்னு அடிக்கிறாங்க, அதற்கு காரணம் அவர்கள் பெற்றெடுப்பதில்லை கத்தரிக்கோல் தான் பெற்றிருக்கிறது. நேரா மருத்துவமனைக்கு செல்கிறார்கள். அங்கு மருத்துவர் வயிற்றை கிழித்து ஆபரேஷன் செய்து வயிற்றிலிருந்து குழந்தையை தலகாணியை போல் தூக்கி போட்டு விடுகிறார். பிறகு தாய் கேட்கிறாள், ஆணா பெண்ணா என கத்திரிக்கோல் பெற்றெடுத்தால் இப்படித்தான் கேட்பார்கள் என பேசினார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com