அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மீட்பு வீரர்கள் தீயை அணைத்து, சபரிநாத் மற்றும் சாந்தி இருவரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால், அவர்கள் இருவரும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து, உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வீட்டில் இருந்த ஃப்ரிட்ஜ் வெடித்ததால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.