இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வன்மம் ; சீமான் மீது பிரஷாந்த் கிஷோர் ஆத்திரம்

இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வன்மம் ; சீமான் மீது பிரஷாந்த் கிஷோர் ஆத்திரம்
இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வன்மம் ; சீமான் மீது பிரஷாந்த் கிஷோர் ஆத்திரம்

வன்முறையைத் தூண்டும் சீமான் போன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை?

"தமிழ்நாட்டில் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வெளிப்படையாக வன்முறையைத் தூண்டும் சீமான் போன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை?" என தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு தேர்தல் பணியாற்றிய, பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், வட மாநில தொழிலாளர்கள் பிரச்னையை கையிலெடுத்து, பீஹார் அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார். ரயிலில் வட மாநில தொழிலாளர் ஒருவர் தாக்கப்படும் வீடியோவை, தமிழக ரயில்வே காவல் துறை, பிப்ரவரி 16-ம் தேதி வெளியிட்டது. இதனை தனது 'ட்விட்டர்' பக்கத்தில் பகிர்ந்த பிரசாந்த் கிஷோர், 'இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை, பீஹார் அரசு கேட்க வேண்டும்' என முன்பு தெரிவித்து இருந்தார்.
வட மாநில தொழிலாளர்கள் பிரச்னை தொடர்பாக பலர், பொய்யான வீடியோக்களை பகிர்ந்தது உண்மை தான். ஆனால், அதற்காகவே, தமிழகத்தில் பிற மாநில தொழிலாளர்களுக்கு பிரச்னை இல்லை என்று சொல்ல முடியாது. விரைவில் உண்மையான வீடியோக்களை வெளியிடுவேன்' எனக் கூறி இருந்தார். இந்நிலையில் தமிழ்நாட்டில் "தமிழ்நாட்டில் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வெளிப்படையாக வன்முறையைத் தூண்டும் சீமான் போன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை? அவர்களின் பரபரப்பான பேச்சுக்காகவா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். பிரசாந்த் கிஷோர் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர். 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com