பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “முதலமைச்சர் முகஸ்டாலின் வாழ்க்கை வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் புகைப்படக் கண்காட்சி பணியை பாராட்டுகிறேன். அமைச்சர் சேகர்பாபு கட்சிக்கும் ஆட்சிக்கும் விசுவாசியாக இருந்து களப்பணி ஆற்றி வருகிறார். அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிமுக கூட்டணிக்கு விசிக வர வேண்டும் என அன்பின் அடிப்படையில் கூறியுள்ளார். அவருடைய அன்பிற்கும், ஆதரவுக்கும் நன்றி. திமுக கூட்டணியில் வலிமையாக, நல்ல இணக்கத்துடன் இருந்து வருகிறோம். திமுக கூட்டணியை அகில இந்திய அளவில் கொண்டு செல்ல இருப்பதே அடுத்த கட்ட பணி.