இதனால், தமிழகத்தில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி உருவாக அதற்கு அச்சாரம் போடுவிதமாக திருமாவளவின் செயல்பாடு இருப்பதாக, தமிழக அரசியலில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. விசிக எம்எல்ஏ ஆளூர் ஷா நவாஸிடம் கேட்டோம்: ’’காவல்துறையை பாஜக மிரட்டுகிறது. அதனால்தான் அமித்ஷா காவல்துறையா? என திருமா குறிப்பிட்டு பேசினார். மற்றபடி கூட்டணியில் எந்த சலசலப்போ, மனவருத்தமோ இல்லை. அதிமுக பாஜகவுடன் கூட்டணி சேரக்கூடாது என்று சொல்வது அவர்களின் நலன் சார்ந்தது மட்டும் அல்ல, மதவெறி சக்திகளிடமிருந்து தமிழகத்தை சிக்க வைத்துவிடக்கூடாது, அதிமுக துணை போய்விடக்கூடாது என்ற நல்லணத்துடன் தான்’’என விளக்கம் அளித்தார்.