புகாரின் பேரில் நடத்திய விசாரணை நடத்திய போலீசார், பணம் கேட்டு மிரட்டல், மோசடியில் ஈடுபட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராமு, அவருக்கு உடந்தையாக செயல்பட்ட, வி.துறையூரைச் சேர்ந்த அங்கமுத்து மகன் இளையராஜா, பாரதியார் நகரைச் சேர்ந்த மிதுன் சக்கரவர்த்தி, ஜான்சன் குமார், லால்குடி அருகே சாத்தம்பாடி பகுதியைச் சேர்ந்த மணிமகன் ரகுநாத் ஆகிய 5 பேர் மீது நிலமோசடி உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் மிதுன்சக்கரவர்த்தி என்பவர் மட்டும் போலீசார் வசம் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்தனர். மீதமுள்ள 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.