ஆளுநர்களுக்கு வாய் இருக்கிறது, காது இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ.சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார். விழாவில் அவர் அப்போது, ‘’சிலரின் கவனக்குறைவால் இந்த சகோதரத்துவம் துண்டுதுண்டாக ஆகிக்கொண்டு இருப்பதை நாம் ஒரு போதும் ஒத்துக்கொள்ள முடியாது.