'தமிழ்நாட்டில் ஒருபோதும் பா.ஜ.க வளராது' - செல்லூர் ராஜூ விமர்சனம்

'தமிழ்நாட்டில் ஒருபோதும் பா.ஜ.க வளராது' - செல்லூர் ராஜூ விமர்சனம்
'தமிழ்நாட்டில் ஒருபோதும் பா.ஜ.க வளராது' - செல்லூர் ராஜூ விமர்சனம்

பாஜகவினர் அதிமுகவில் இணையும்போது கசக்கிறதா?

அதிமுக மற்றும் பாஜக இடையேயான உறவு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. தூத்துக்குடியில் பாஜக தொண்டர்கள், அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படங்களை எரித்து, "கூட்டணி தர்மத்தை" மீறியதாக குற்றம்சாட்டினர். கடந்த வாரம் பலரும் பாஜக தலைவர்கள் அதிமுகவில் இணைந்தனர். அவர்களில் பாஜகவின் மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் சிஆர்டி நிர்மல் குமாரும் ஒருவர். புதன்கிழமை அன்று மேலும் 13 பாஜக உறுப்பினர்கள் சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு ஆதரவாக கட்சியில் இருந்து விலகினர்.
திமுக அமைச்சர் ஒருவருடன் அண்ணாமலை ரகசிய புரிந்துணர்வு கொண்டிருந்ததாக குற்றம் சாட்டி, ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் குமார்.
2019 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பாஜகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்ட அதிமுக மூன்று தேர்தல்களில் தோல்வியைத் தழுவியது. சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்ததால் கட்சிகள் இணைந்து பிரச்சாரம் செய்யவில்லை. கடந்த ஆண்டு நவம்பரில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தனிப்பட்ட முறையில் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். பாஜகவிடம் இருந்து அதிமுக வேட்டையாடப்படுவதாக ரத்தத்தின் ரத்தங்கள் உணர்ந்தனர். நாங்கள்தான் எதிர்கட்சி. தமிழகத்தில் நாங்கள் வளர்ந்து வருகிறோம். பாஜக இரண்டாவது இடத்திற்கு வந்துவிட்டது. பாஜக வளர்ந்துவிட்டது என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
மாநிலத்தின் மறைந்த அரசியல் தலைவர்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பேசிய அவர், "ஜெயலலிதா, கருணாநிதி போன்ற ஒரு தலைவர்களைப் போன்று  நானும் ஒரு தலைவர்தான். நான் நிர்வாகி அல்ல, ஒரு தலைவர்" என்று திரு அண்ணாமலை கூறியது அதிமுகவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. 
மாநிலத்தில் மிகக் குறைவான பலம் கொண்ட பாஜகவின் வேட்டையாடலை அதிமுக விரும்பவில்லை. அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன், அண்ணாமலையை "பாஜக தலைமையால் பரிந்துரைக்கப்பட்ட கார்ப்பரேட் கட்சியின் மேலாளர்" என்று அழைத்தார். ஜெயலலிதாவை போல முடிவெடுப்பேன் என பேசியதற்காக அண்ணாமலைக்கு அதிமுகவினர் பதிலடி கொடுத்தனர். கடந்த காலங்களில், இப்போது சட்டசபையில் கட்சியின் தலைவராக இருக்கும் முன்னாள் அமைச்சர் நைனார் நாகேந்திரன் உள்ளிட்ட அதிமுக மூத்த தலைவர்களை பாஜக இழுத்துக் கொண்டது. 
234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் வெறும் நான்கு எம்.எல்.ஏக்களைக் கொண்ட பாஜக, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே நடந்து வரும் மோதலுக்கு மத்தியில் தன்னை முக்கிய எதிர்க்கட்சியாக முன்னிறுத்திக் கொள்ளப்பார்த்தது. அப்போதே பிரச்னை தொடங்கியது. இந்நிலையில், இன்று நடைபெறுகிற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது பொதுச்செயலாளர் தேர்வு, பாஜகவுடன் மோதல் பாஜக கூட்டணியை விட்டு விலகலாமா? போன்ற விவகாரங்கள் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், ‘தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை தாண்டி தமிழகத்தில் பாஜக ஒருபோதும் வளராது.  எடப்பாட்டி பழனிசாமி உருவப்படத்தை எரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. பாஜகவுக்கு சகிப்புத் தன்மை இல்லை. அண்ணாமலைக்கு வாய்க்கொழுப்பு அதிகமாகி விட்டது. அவருக்கு வாயடக்கம் தேவை.
அதிமுகவினர் பாஜகவில் இணைந்த போது இனித்தது, பாஜகவினர் அதிமுகவில் இணையும்போது கசக்கிறதா? மத்தியில் ஆளுங்கட்சி என்ற திமிரில் பாஜகவினர் நடந்து கொள்ள கூடாது ’எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com