சேலம் டூ தாரமங்கலம் ரோட்டில் அமைந்திருக்கிறது அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவகல்லூரி. இந்த மருத்துவகல்லூரியில் நுண்ணுயிரி துறை தலைவராக இருப்பவர் ராஜேஷ். இவர் இரட்டை அர்த்தத்தில் கமெண்ட் செய்கிறார், பெண் பேராசிரியர்களின் பின்னழகை பற்றி பேசுகிறார் என்று மருத்துவ துறை, காவல்துறை, முதல்வர் தனி உதவியாளர் வரையிலான மேலிடத்துக்கு அங்கு பணிபுரியும் உதவி பேராசிரியைர்கள் புகார் அளித்திருந்தனர். இந்த புகார் சேலம் காவல்துறைக்கு அனுப்பபட்டது. சேலத்துக்கு ஸ்டாலின் விசிட் போன்ற காரணங்களால் விசாரணை தள்ளி போனது. இதே புகாரை சேலம் மருத்துவக்கல்லூரி டீனிடம் கொடுத்த உதவி பேராசியைகள் ' டீன் துறை தலைவருக்கு சாதகமாக நடப்பதாகவும் குற்றம் சுமத்தினார்கள்.