ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம்: மீண்டும் நிறைவேறினால் ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும் -அமைச்சர் ரகுபதி

ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம்: மீண்டும் நிறைவேறினால் ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும் -அமைச்சர் ரகுபதி
ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம்: மீண்டும் நிறைவேறினால் ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும் -அமைச்சர் ரகுபதி

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மாசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார்.

ஆன்லைன் ரம்மி விவகாரம் "திருப்பி அனுப்பிய தடை சட்டம் மீண்டும் இயற்றினால் ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களால், அடுத்தடுத்து பல்வேறு தற்கொலைகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. பலர் இந்த சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகி, பணத்தை இழந்து தற்கொலை முடிவை எடுக்கின்றனர். தமிழகத்தில் இதுவரை 44 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதற்கிடையே ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்திய நிலையில், தமிழக சட்டப்பேரவையில் அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக  அனுப்பி வைக்கப்பட்டது.  அதற்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கிய நிலையில், அவசர சட்டம் கடந்த அக்.3ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது.
இதனையடுத்து அக்டோபர் மாதத்தில் சட்டபேரவை குளிர்கால கூட்டத்தொடரில், ஆன்லைன் சூதாட்ட அவசர சட்டதிற்கு மாற்றாக சட்டமசோதாவை அமைச்சர் எஸ்.ரகுபதி தாக்கல் செய்தார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அந்த மசோதாவில் பல்வேறு விளக்கங்களை ஆளுநர் கோரியிருந்தார். அதற்கு 24 மணி நேரத்தில் விளக்கங்களை தமிழக அரசு அளித்தது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு டிசம்பர் 2ம் தேதி சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து ஆளுநர் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டு நடத்தும் பிரதிநிதிகளை சந்தித்து பேசியது விமர்சிக்கப்பட்டது.
இந்த முறையும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மாசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார். மத்திய அரசின் கீழ் வரும் விவகாரத்தில், மாநில அரசு எந்த அடிப்படையில் சட்டம் இயற்றலாம் என்பது உள்ளிட்ட 8 கேள்விகளை முன்வைத்து திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “ஆளுநர் எப்படி நிராகரித்தார் என்பது தெரியவில்லை. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி  திருப்பி அனுப்பிய, ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை மீண்டும் சட்டமறத்தில் நிறைவேற்றினால், அதற்கு அவர் கண்டிப்பாக ஒப்புதல் கொடுத்தே ஆக வேண்டும், அதுதான் சட்டம்“ என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com