2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7301 காலிப்பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு அறிவிக்கப்பட்டு ஜூலை மாதம் 24 ஆம் நாள் தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில் அக்டோபர் மாதமே வெளியாக வேண்டிய முடிவுகள் 7 மாதங்கள் ஆகியும் வெளியிடப்படாமல் தாமதம் ஆகிக்கொண்டு இருக்கிறது. சுமார் 18 லட்சம் தேர்வர்கள் குரூப்- 4 தேர்வை எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்திருக்கும் நிலையில், இம்மாதம் முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.