இந்நிலையில், தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களின் நிலை என்ன என்பதைக் குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக நான்கு அதிகாரிகளை கொண்ட பீகார் குழுவினர் தமிழகம் வந்திருந்தனர். இந்த குழு இரண்டு நாட்களுக்கு முன்பு, தமிழகத்தில் திருப்பூர் சென்று வடமாநில தொழிலாளர்களை நேரில் ஆய்வு செய்தனர். திருப்பூர் மற்றும் கோவை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்ட பிறகு, தற்போது சென்னையில் வடமாநில தொழிலாளர்களை சந்தித்து அவர்களது கருத்துக்களை கேட்டுள்ளனர். தமிழகத்தில் அவர்களுக்கான பாதுகாப்பு எப்படி இருக்கிறது, என்னென்ன பணிகளை மேற்கொள்கிறார்கள் என்பதை பற்றின கருத்துக்களை கேட்டறிந்தனர்.