'பா.ஜ.க-வுடனான கூட்டணியால்தான் நாம் அதிமுக ஆட்சியை இழந்தோம், ஆகவே, பாஜ.க-வுடன் கூட்டணி வேண்டாம்' என முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், சி.வி.சண்முகம் எனப் பலரும் தொடர்ந்து பேசி வந்தனர். இதன் காரணமாகத்தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க – பா.ஜ.க தனித்து போட்டியிட்டன. இருந்தபோதிலும் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி தொடர்வதாக இரு தலைமைகளும் அவ்வப்போது பேசி உறுதிப்படுத்தி வந்தன. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போது, பா.ஜ.க-வின் கொடி, தலைவர்களின் படம் ஆகியவற்றைப் பயன்படுத்துவதை அ.தி.மு.க தவிர்த்தது.