அரசியல்
ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் கை ஓங்குகிறது! தொடர்ந்து காங்கிரஸ் முன்னிலை
ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் கை ஓங்குகிறது! தொடர்ந்து காங்கிரஸ் முன்னிலை
இரண்டாவது சுற்று முடிவில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.
இத்தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இரண்டாவது சுற்று முடிவில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. இரண்டாவது சுற்றில் காங்கிரஸ் கட்சி 17,471 வாக்குகளும், அதிமுக 5,598 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 585 வாக்குகளும், தேமுதிக கட்சி 17 வாக்குகளும் பெற்றுள்ளனர்.