திரிபுரா, நாகலாந்தில் மீண்டும் மலர்கிறது தாமரை!

திரிபுரா, நாகலாந்தில் மீண்டும் மலர்கிறது தாமரை!
திரிபுரா, நாகலாந்தில் மீண்டும் மலர்கிறது தாமரை!

திரிபுராவில் 40-க்கும் மேற்பட்ட இடங்களிலும், நாகலாந்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களிலும் பாஜக முன்னிலை

நாகலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேகலாயாவில், தேமக முதலிடம் பெற்று முன்னிலை வகிக்கிறது. பாஜக இரண்டாம் இடத்தில் உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. திரிபுராவில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 16-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அங்கு 90 சதவீத வாக்குகள் பதிவாகின. அதே போன்று தலா 60 இடங்களைக் கொண்ட மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே கட்டமாக 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருந்தது. ஆனால் மேகாலயாவில், சோஹியாங் தொகுதியில் ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் டான்குபார் ராய் லிங்டோ மறைவால் தேர்தல் ஒத்தி போடப்பட்டதால் எஞ்சிய 59 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

நாகாலாந்தில், அகுலுட்டோ தொகுதியில், தற்போதைய எம்.எல்.ஏ. காஜெட்டோ கினிமி, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. திரிபுராவில் 90 சதவீதமும், மேகாலயாவில் 85 சதவீதமும், நாகாலாந்தில் 84 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில் இன்று காலை முதல் மூன்று மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. திரிபுரா, நாகலாந்து ஆகிய மாநிலங்களில் பாஜக அதிக முன்னிலையில் உள்ளது. 

திரிபுராவில் 40-க்கும் மேற்பட்ட இடங்களிலும், நாகலாந்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களிலும் பாஜக முன்னிலை வகிக்கிறது

ஏற்கனவே திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்துவரும் நிலையில், இத்தேர்தலிலும் வெற்றி முகத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்கிறது. 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com