பாமக யாருடன் கூட்டணி..? அன்புமணி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

பாமக யாருடன் கூட்டணி..? அன்புமணி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பாமக யாருடன் கூட்டணி..? அன்புமணி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உலகத்திற்கே தெரிந்த விஷயம் தேர்தல் ஆணையத்திற்கு தெரியாமல் இருக்குமா?

திமுக உடன் கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர், ‘’நாடாளுமன்றத் தேர்தலைப் பொருத்தவரை 5 மாதத்திற்கு முன்பாக எங்களது நிலைப்பாட்டை தெரிவிப்போம். 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும். திமுக உடன் கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் இல்லை. வதந்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஒரு கேலிக்கூத்து. இது ஜனநாயகத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய அவப்பெயர். தமிழகத்தில் தேர்தல் ஆணையம் உள்ளதா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். பணம் மற்றும் பரிசுகளை கொடுத்து தேர்தலை நடத்த வேண்டுமா என கேள்வி எழுப்பினார்.
1 மாதம் ஒட்டுமொத்த அமைச்சரும் ஈரோடு கிழக்கு தொகுதியை குத்தகைக்கு எடுத்து கொண்டதால் தமிழக அரசு பணிகள் அனைத்தும் ஸ்தம்பித்தது. உலகத்திற்கே தெரிந்த விஷயம் தேர்தல் ஆணையத்திற்கு தெரியாமல் இருக்குமா? ஆளும்கட்சி, ஆண்ட கட்சி என இருவருமே பணம் கொடுத்துள்ளனர். இதில் யார் ஜெயித்தாலும் தோற்றம் ஜனநாயகம்தான்’’என அவர் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com